articles

img

நியூஸ்கிளிக் மீதான தாக்குதல் விவசாயிகள் மீதான தாக்குதலே - பேரா.விஜய் பிரசாத்

தில்லி காவல்துறையின் 500 அதிகாரிகள் தில்லி முழுவதும் 100 ஊடகவியலாளர்கள்  மற்றும் ஆராய்ச்சியா ளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை இந்த ஊடகவியலா ளர்களின் மடிக்கணினிகள்/அலைபேசிகள்/ஏனைய கருவிகளை பறித்தனர். இந்த ஊடகத்தின் மீதான தாக்குதலின் மைய இலக்கு நியூஸ் கிளிக் ஆகும். அன்றைய நாளின் முடிவில் காவல்துறையினர் நியூஸ் கிளிக்கின் அமைப்பாளரும் ஆசிரியருமான பிரபிர் புர்காயஸ்தா, மனித வள மேம்பாடு பிரிவின் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். 2009-ல் தொடங்கப்பட்ட நியூஸ் கிளிக் மீது ஏன் இந்த தாக்குதல்கள்?

அபாண்ட குற்றச்சாட்டு

தில்லி காவல்துறையின் விசாரணை அதிகாரிகள் ஒரு பிரச்சனையில் குவிமையமாக கவனம் செலுத்தி னர். அது 2020/2021-ல் நடந்த மாபெரும் விவசாயிகள் போராட்டம் ஆகும். இந்த போராட்டம் குறித்து செய்தி எழுதினீர்களா? அவ்வாறு எழுதியதற்கு நியூஸ் கிளிக் நிர்வாகம் வெகுமதிகளை தந்தார்களா? இந்த கேள்விகளை திரும்பத்திரும்ப அதிகாரிகள் ஊடக வியலாளர்களிடம் கேட்டனர். விசாரணைக் கேள்வி கள் மிகவும் முரட்டுத்தனமாகவும் நேரடியாகவும் இருந்தன. எந்தவொரு சட்ட மீறல் குறித்தும் கேள்வி கள் இல்லை. மாறாக விவசாயிகள் போராட்டம் மற்றும் கோவிட் 19 காலத்தில் அரசின் செயல்பாடுகள்  குறித்து விமர்சனம் இவை குறித்து தான் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தின் 19(1) பிரிவு பேச்சுரிமை எழுத்துரிமையை தருகிறது. எனினும் “உலக பத்திரிகை சுதந்தரம் குறியீடு 2023”ல் இந்தியா கீழ்மட்டத்தில் 180 நாடுகளில் 161வது இடத்தில் கீழிறங்கி உள்ளது.

கைதுக்கு பிறகு பல முறை கோரிய பின்னர் பிரபிர் புர்காயஸ்தா மற்றும் அமித் சக்கரவர்த்திக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அவர்க ளின் கைதுக்கு காரணங்கள் என்ன என்பதை முன் வைத்தது. இந்த முதல் தகவல் அறிக்கை, அடிப்படை யிலேயே  பொய்களையும் மாயத்தோற்றத்தையும் உரு வாக்குவதாக உள்ளது. இவர்கள் செய்த குற்றம் என்ன என்பது அதில் விளக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை ஒரு மோசடியான பொய்கள் நிறைந்தது என நியூஸ் கிளிக் அழுத்தமாக எதிர்வினையாற்றியது. 

மிகவும் குரோதத்தனமான குற்றச்சாட்டு என்னவெ னில் அரசு மற்றும் தனியார் சீனப்பணத்தை, நியூஸ் கிளிக் பெற்றது என்பதாகும். சீனாவிலிருந்தோ அல்லது சீன அமைப்புகளிடமிருந்தோ எந்தவித பணம் அல்லது அறிவுரைகளை நாங்கள் கிஞ்சிற்றும் பெற்றது கிடையாது என நியூஸ் கிளிக் மிகத்தெளிவாக பகிரங்கமாகக் கூறியுள்ளது. 2019-ஆம் ஆண்டு நியூஸ் கிளிக்கில் முதலீடு செய்தது வேல்டுவைடு மீடியா ஹோல்டிங்க்ஸ் (Worldwide Media Holdings) எனும் அமைப்பாகும். இந்த அமைப்பு முதலீடுக்கு பயன்படுத்தப்பட்ட நிதி என்பது அபக்ஸ் பார்ட்னர்ஸ் எனப்படும் இங்கிலாந்து நிறுவனத்துக்கு ஒரு மென் பொருள் நிறுவனத்தை விற்றதன் மூலம் பெறப் பட்ட நிதி என்பதை அதன் முதன்மை அதிகாரி ஃபெட்ச் சர் ஒரு அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார். 

விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தும் குற்றச்சாட்டு

முதல் தகவல் அறிக்கை கொடூரமான முறையில், சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் கீழ்க்கண்ட குற்றச் சாட்டுகளை முன்வைக்கிறது:

“சட்டத்துக்கு விரோதமான அந்நிய நிதி மூலம் விவசாயிகள் போராட்டத்தை நீட்டிக்கச் செய்தனர். இதன் விளைவாக இந்திய சமூகத்தின் வாழ்வைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பொருட்களையும் சேவைகளையும் தடுப்பதற்கா கவும் சொத்துக்களை அழிப்பதற்கும் சதித் திட்டம் தீட்டினார்கள். இந்த தீய நோக்கத்துக்காக சில இந்திய அமைப்புகளுக்கும் தேச விரோத அந்நிய அமைப்புகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை தரும் சில தொடர்புகள் உருவாயின என்பது அறியப்படுகிறது. இந்த தொடர்பின் நோக்கம் என்னவெனில் பரஸ்பரம் தமக்குள் சில நன்மைகளை உருவாக்கிக் கொள்வ தற்காக விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதும் அதற்கு நிதி அளிப்பதும் ஆகும். விவசாயிகள் போ ராட்டம் மூலம் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இந்திய பொருளாதாரத்துக்கு நட்டம் விளைவிப்பதும் இந்தியாவில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை விளைவிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.”

சிறிதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் வெள்ளத் தில் நியூஸ்கிளிக் மற்றும் அதன் ஊடகவியலாளர் கள் மீது சில கொடூரமான குற்றங்கள் முன்வைக்கப்படு கின்றன. அவை:

1. நியூஸ்கிளிக் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் தேச விரோத அந்நிய அமைப்புகளிடமிருந்து நிதியை பெற்றுக்கொண்டு விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகளை வெளியிடவில்லை; மாறாக போராட்டத்தை தூண்டினார்கள்.

2. நியூஸ்கிளிக் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் இந்திய பொருளாதாரத்தைச் சிதைக்கவும் உள் நாட்டு அமைதியை கெடுக்கவும் விவசாயிகள் போராட்டத்தை நீட்டிக்கச் செய்தார்கள்.

3. நியூஸ்கிளிக் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் விவசாயிகள் போராட்டத்தை தொடரச் செய்ததன் மூலம் இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சு றுத்தல் ஏற்படுத்தினார்கள்.

இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அரசாங்கம் 2020-21 போராட்டத்தில்  விவசாயி களின் மகத்தான பங்கின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்ல; அதனை கொச்சைப்படுத்த வும் செய்கின்றனர். இந்த போராட்டத்தின் வரலாறு நியூஸ்கிளிக் தொடங்கப்பட்ட 2009க்கு முன்னரே தொடங்கிவிட்டது. விவசாயிகள் போராட்டத்தை நியூஸ்கிளிக் தூண்டிவிட்டது என கூறுவது அந்த மகத்தான போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும். விவசாயிகளின் குடும்பங்களை, கிராமப்புறங்களில் வாழும் 100 கோடி மக்களை அதாவது இந்தியாவின் 70% மக்களை அவமானப்படுத்துவது ஆகும். ஏனெ னில் அவர்களில் பெரும்பாலானோர் அந்த போராட் டத்தை ஆதரித்தனர். 

தற்கொலையிலிருந்து  போராட்டப் பாதைக்கு

1995-க்கும் 2018-க்கும் இடையே கிட்டத்தட்ட 4,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட னர். அவர்களில் கால்வாசிப்பேர் மோடி ஆட்சிக்கு பின்னர் தற்கொலை செய்துள்ளனர். ஏன் இந்த தற்கொலைகள்? ஏனெனில் விவசாயத்தின் இடுபொ ருட்களின் விலை தாறுமாறாக ஏறியது. ஆனால் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு விலை வீழ்ச்சியைக் கண்டது. இது 1991க்கு பின்னர் அம லாக்கப்பட்ட நவீன நாசகர பொருளாதாரக் கொள்கை களின் விளைவு. விவசாயிகளுக்கு அரசு மூலம்  கிடைத்த கடனை நிறுத்தியது/விளைபொருட்களுக் கான ஆதார விலையை மறுத்தது/விவசாயப் பொரு ளாதாரத்தில் மெகா கார்ப்பரேட்டுகளை நுழைய விட்டது ஆகியவை விவசாயிகளின் நம்பிக்கையின் மீது பெரும் பாறாங்கல்லை போட்டது போல ஆனது. இதன் விளைவாக விவசாயிகள் கடனாளிகளாக மாறினர். கடனை கட்ட முடியாமல் விலை உயர்ந்து போன உரத்தையே குடித்து மாண்டனர். 

எனினும் கடந்த பத்தாண்டு காலத்தில் இடதுசாரி உட்பட பல விவசாயி அமைப்புகள் தலைமையில் விவ சாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வலுவான அணிதிரட்டல் மூலம் இந்தியா முழுதும் போராடினர். இதன் மிக முக்கிய திருப்புமுனை 2018 மார்ச்சில் 50,000 விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நடத்திய நடைபயணம் ஆகும். மார்ச் 11 அன்று பின்னிரவில் விவசாயிகள் மும்பையை அடைந்த பொழுது அடுத்த நாள் மிக முக்கிய தேர்வுகள் மாணவர்களுக்கு நடக்க  இருப்பதை அறிந்தனர். எனவே சோர்வுற்றிருந்த விவ சாயிகள் ஓய்வு எடுத்து அடுத்த நாள் நடப்பதற்கு மாறாக அன்று இரவே தமது இலக்கான ஆசாத் மைதா னத்தை  அடைந்தனர். மாணவர்களின் தேர்வு அன்று எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உத்தர வாதம் செய்தனர். விவசாயிகளின் இந்த பரந்த எண்ணம் பற்றிய செய்தி  மும்பைவாசிகளை அடைந்த பொழுது அவர்களில் பலர் ஆசாத் மைதானத்துக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தனர். இந்த நீண்ட பயணத்துக்கு பின்னர் பல விவசாயிகள் போராட் டங்கள் நடந்தன. இந்த போராட்டத்துக்கு முன்னர் மத்தி யப் பிரதேசம்/ ராஜஸ்தான்/ மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் விவசாயிகள் போராடினர். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கிச்சூடு நடத்தி பல விவசாயிகளைக் கொன்றது.

அங்கேயே தங்கி  செய்திகள் தந்தனர்

2020ஆம் ஆண்டு வெயில் காலத்தில் பிரதமர் மோடி அரசு நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திணித்தது. இந்தச் சட்டங்கள் விவசாயி களை “உபரிமயமாக்கிவிடும்” ஆபத்து அதாவது விவ சாயிகள் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு தினக்கூலிப் பணியாளாக மாறும் ஆபத்து இருந்தது. மோடியின் மூன்று சட்டங்களும் தமது வாழ்வுக்கு உலை வைப்பவை என்பதை விவசாயிகள் நன்றாக உணர்ந்தனர். 2020 நவம்பர் 26 அன்று 25 கோடி தொழி லாளர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தத்தில் விவசாயி களும் பங்கேற்றனர். அடுத்த நாள் அவர்கள் தில்லி எல்லைகளில் போராட்டத்தை துவக்கினர். பல ஊடக வியலாளர்கள் இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்து பின்னர் திரும்பிவிட்டனர். ஆனால் நியூஸ்கிளிக் ஊடகவியலாளர்கள் மட்டும் அங்கேயே தங்கினர். விவசாயிகள் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வு செய்து செய்திகளை தொகுத்தனர். 

நியூஸ்கிளிக் இணைய பக்கத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம் அதிகரித்தது. விவசாயிகளின் பேட்டிகளை முன்வைத்த நியூஸ்கிளிக்கின் சிறு காணொலிகள்  மிகவும் பிரபலம் அடைந்தன. இந்த போராட்டம் தீவிரமடைந்தது. காவல்துறையின் அடக்குமுறைகள்/ அரசின் குரோதம் மற்றும் தாக்குதல்கள்/ மோசமான தட்பவெப்பநிலை/ வலது சாரி அமைப்புகளின் கொலை வெறித் தாக்குதல்கள் எதுவும் விவசாயிகளின் போராட்டத்தை அசைக்க இயலவில்லை. 2021ஆம் ஆண்டு  நவம்பர் 19-ல் மோடி சரணடைந்தார்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார். மோடி தான் இயற்றிய சட்டங்களை திரும்பப் பெற்றது இது இரண்டாவது தடவை மட்டுமே! விவசாயிகள் அதனை செய்து காட்டினர்.

நியூஸ்கிளிக்கும் விவசாயிகளும்

2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பிரபிர் புர்காயஸ்தா இல்லத்தில் சோதனை நடத்தியது. 5 நாட்கள் அவரை அவரது இல்லத்தில் முடக்கி வைத்தது. அவருடைய மடிக்கணினி மற்றும் அலைபேசிகள் பறிக்கப்பட்டன. அவற்றிலிருந்து ஏராளமான தரவுகள் பறிக்கப்பட்டன. இந்திய அரசாங்கம் நியூஸ்கிளிக் மற்றும் டிரை காண்டினெண்டல் போன்ற ஆய்வு அமைப்புகளை குறிவைப்பது என்பது, விவசாயிகள் போராட்டத்தை துல்லியமாகவும் நுணுக்கமாகவும் ஆய்வு செய்து தருவதுதான் காரணம் என்பது வெள்ளி டைமலை! விவசாயிகள் போராட்டத்தை நியூஸ்கிளிக் மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, செய்திகளை வெளியிடுவதால் லட்சக்கணக்கானவர்கள் அந்த இணைய இதழை பார்க்கின்றனர் எனவும் அதனால் தான் அது குறிவைக்கப்படுகிறது எனவும் தி வயர் இதழில் அப்பொழுதே பேராசிரியர் அபூர்வானந்தா எழுதினார். 

எனவே பணப்பரிமாற்றம்/ அந்நியத் தாக்கம்/ சீனாவின் தலையீடு என பரப்பப்படும் செய்திகள் உண்மை அல்ல; மாறாக நியூஸ்கிளிக் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு அடிப்படைக் காரணம் விவசாயிகள் போராட்டத்தை அந்த இதழ் செய்திகள் மூலம் உண்மைகளைப் பேசியதுதான்

நியூஸ்கிளிக்குக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை யின் விவரங்கள் வெளிவந்த பின்னர் விவசாயிக ளின் மைய அமைப்பான “சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்)” ஒரு காட்டமான அறிக்கையை வெளி யிட்டது. அதில் விவசாயிகள் போராட்டத்தை இழிவு படுத்தியிருப்பதையும் நியூஸ்கிளிக்குக்கு எதிரான நட வடிக்கைகளையும் விவசாய அமைப்பு கண்டித்தது. அந்த அறிக்கையில் கீழ்கண்டவற்றை எஸ்கேஎம் முன்வைத்தது:

அரசின் மூர்க்கத்தனமும்  மக்கள் விரோத மனோபாவமும்

“விவசாயிகள் போராட்டம் மிகவும் அமைதி யாக நடந்தது. எந்த ஒரு பொருட்கள் செல்வதையும் விவசாயிகள் தடுக்கவில்லை. விவசாயிகளால் பொருளாதாரத்துக்கு எந்த நட்டமும் ஏற்பட வில்லை. சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக வில்லை. கடும் வெயிலிலும் உறைய வைக்கும் பனியிலும் கொட்டும் மழையிலும் விவசாயிகள் 13 மாதங்கள் போராடினர். ஒன்றிய அரசும் அதன் அமைச்சர்களும்தான் லக்கிம்பூரில் 4 விவசாயிக ளையும் ஒரு பத்திரிகையாளரையும் வாகனம் ஏற்றிக் கொன்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினர். அத்தகைய தியாகத்தை இழிவு படுத்தியது என்பதும் இந்த போராட்டத்திற்கு அந்நிய நிதி தூண்டுகோலாக இருந்தது என்று சொல்வதும் பயங்கரவாதம் என வகைப்படுத்துவ தும் அரசின் மூர்க்கத்தனத்தையும் அறியாமையை யும் மட்டுமல்ல; மக்கள் விரோத மனோபாவத்தை யும் வெளிப்படுத்துகிறது”.

விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்துவதை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் அரசுக்கு எதிரான இயக்கங்களை நடத்த முடிவு செய்துள்ளது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது போராட்டத்தில் நியூஸ்கிளிக் போன்ற ஊடகங்களு டனும் இணைத்து கொண்டுள்ளது. இந்த பிரச்சனை நீதிமன்றங்களில் மட்டுமல்ல; விவசாயிகள் இயக்கத் திலும் பிரதிபலிக்கப் போகிறது. இந்திய விவசாயிகள் தங்களுக்காக மட்டுமல்ல; ஊடகங்களை அழிப்ப தற்காகச் செய்யப்படும் முயற்சிகளை எதிர்த்தும் நடக்கும் இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்ள ஆயத்தமாகியுள்ளனர்.